ஆம். பிறப்பில் உயிர்களின் தொடக்கம். என் எழுத்துப் பிறப்போ என்னவர்களின் மரணத்தில் தொடங்குகிறது.
என்னவர்கள் என்றால், என் மொழி பேசுவதாலா?. என் இனம் என்பதாலா? இல்லை, என் உறவுகள் என்பதாலா?
இல்லை. என்னொத்த மனிதர்கள் என்பதால்.
எழுந்து,உண்டு, வேலைக்குச் சென்று, மனைவி, குழந்தைகளுடன் குலாவி மகிழ்ந்து, மீண்டும் உறங்கி என உலக மாந்தர் எல்லாம் இன்புற்று இருக்க,
விழிக்கும் போது, "இன்னும் உயிருடன் இருக்கிறோம்" என்றோ, "இன்னுமாஉயிருடன் இருக்கிறோம்" என்றோ விழிப்பதும், உறங்கப் போகும் முன் மரணத்தைஎதிர்பார்த்த படியே படுக்கச் செல்வதுமாய் நம்மொத்த மனிதர்கள்
நடுங்கிச் சாவதைப் பார்க்கையில்
நித்தம் என் மனதில் யுத்தம்.
No comments:
Post a Comment