Wednesday, February 25, 2009

க ரு கி ய க ன வு க ள்

கட்டுக்கதைகள்
பேசிக் கழித்து நம்
காலங்கள் போனதடா!

கண்ணைக் கட்டும்
மயக்கும் தீமைகள் சேர்ந்து
நம் கனவுகள் மாய்த்ததடா!

முட்டும் பகையை
மோதித் துரத்தும் நம்
வீரங்கள் வீழ்ந்ததடா!

பல வெட்டிப்பயல்கள்
சேர்க்கையில் நமது
தீரங்கள் தீய்ந்ததடா!

எட்டும் தொலைவினில்
எதிரினில் தென்பட்ட
எம் இலக்குகள் எரிந்ததடா!

அதைத் தட்டிப் பறித்து
தரையினில் வீசி
தரித்திரம் சிரித்ததடா!

பட்டும் பகட்டும்
பணமுடன் புகழும்
பிரித்தது சென்றதடா!

படைகட்டித் தீமை
பற்றி நம்முடை
நம்பிக்கை கொன்றதடா!

No comments:

Post a Comment